சென்னை : மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முன்னதாக நக்கீரன் கோபாலை பார்க்க அனுமதி கேட்டு சிந்தாரிபேட்டை காவல்நிலையத்தில் போலீசுடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நக்கீரன் கோபாலை கைது செய்தது பத்திரிகையாளர்களை மிரட்டும் செயல் என்று கூறிய வைகோ, காவல்துறையை இழிவுபடுத்திய நபரை ஆளுநர் மாளிகைக்கு அமைத்து விருந்து ஆளுநர் பன்வாரிலால் வைக்கிறார் என்றும் நெருக்கடி நிலையை போல விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலை கைது செய்துள்ளனர் என்றும் வைகோ தெரிவித்தார். மேலும் சட்டவிதிகளின்படி வழக்கறிஞர் என்ற முறையில் நக்கீரன் கோபாலை சந்திக்க வந்துள்ளேன் என்றும் நக்கீரன் கோபாலை சந்திக்க போலீசார் அனுமதி தரவில்லையெனில் அவமதிப்பு வழக்கு தொடுப்பேன் என்றும் வைகோ கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி